மாற்றத்தை ஏற்படுத்தும் அதிகாரம் மக்களின் கைகளில்- அனுரகுமார திஸாநாயக்க

Anura kumara dissanayakka

நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பண்டாரகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் ஆட்சியை மாற்றுவதற்கு நாட்டு மக்கள் தயக்குகிறார்கள். சரியான மக்கள் மற்றும் சரியான அரசாங்கத்துடன் நாட்டை அபிவிருத்தி செய்வதே முன்னேற்றத்திற்கான ஒரே மாற்று வழியாக உள்ளது.

மாற்றத்தை ஏற்படுத்தும் அதிகாரம் மக்களுக்கு உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Exit mobile version