10a4fce8 anura
அரசியல்இலங்கைசெய்திகள்

படுகொலைகளுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர் உயர் கதிரையில்! – அநுர

Share

” படுகொலைகளுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்  உயர் கதிரையில் அமர்ந்திருக்கையில், நாம் எப்படி வீதியில் சுதந்திரமாக நடமாடமுடியும்? ” – என்று கேள்வி எழுப்பினார் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு,

எமக்கான பாதுகாப்பை சுயமாக ஏற்படுத்திக்கொண்டுள்ளோம். நான் வாகனத்தில் பயணக்கும்போது, எமது கட்சி தோழர்கள் சூழ இருந்து பாதுகாப்பை வழங்குவார்கள்.

நாம் முட்டாள்தனமாக செயற்படுவதில்லை. முன்னாயத்தமாக இருப்பதால்தான் முட்டை வீச்சு தாக்குதல் நடத்த வந்தவர்களை மடக்கிபிடிக்ககூடியதாக இருந்தது. நுகேகொடை கூட்டத்துக்கு தாக்குதல் நடத்த வந்தவர்கள் தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்தக்கூடியதாக இருந்தது.

நான் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர், தோழர் நான் வருகின்றேன் என தெரியப்படுத்துவேன், உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும். நாளையும் நான் இப்படிதான் செயற்படுவேன்.

வாகனத்தில் பயணிக்கும்போது கல் வீச்சு அல்லது முட்டை வீச்சு தாக்குதல் நடத்தி, விபத்தை ஏற்படுத்தி எமது உயிரை பலியெடுக்க முடியும் என நினைக்கின்றீர்களா? அவ்வளவு எளிதில் எம்மை வீழ்த்திவிடமுடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

பாதுகாப்பு தொடர்பில் நாம் விழிப்பாகவே இருக்கின்றோம். எனது வாகனத்துக்கு ‘ஹெல்மட்டுடன்’ ஏறியவர் எனக்கு பாதுகாப்பு வழங்கும் தோழர். மழையால்தான் அவர் வாகனத்தில் ஏறினார். அதில் உள்ள தவறு என்ன? ” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...