10a4fce8 anura
அரசியல்இலங்கைசெய்திகள்

படுகொலைகளுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர் உயர் கதிரையில்! – அநுர

Share

” படுகொலைகளுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்  உயர் கதிரையில் அமர்ந்திருக்கையில், நாம் எப்படி வீதியில் சுதந்திரமாக நடமாடமுடியும்? ” – என்று கேள்வி எழுப்பினார் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு,

எமக்கான பாதுகாப்பை சுயமாக ஏற்படுத்திக்கொண்டுள்ளோம். நான் வாகனத்தில் பயணக்கும்போது, எமது கட்சி தோழர்கள் சூழ இருந்து பாதுகாப்பை வழங்குவார்கள்.

நாம் முட்டாள்தனமாக செயற்படுவதில்லை. முன்னாயத்தமாக இருப்பதால்தான் முட்டை வீச்சு தாக்குதல் நடத்த வந்தவர்களை மடக்கிபிடிக்ககூடியதாக இருந்தது. நுகேகொடை கூட்டத்துக்கு தாக்குதல் நடத்த வந்தவர்கள் தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்தக்கூடியதாக இருந்தது.

நான் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர், தோழர் நான் வருகின்றேன் என தெரியப்படுத்துவேன், உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும். நாளையும் நான் இப்படிதான் செயற்படுவேன்.

வாகனத்தில் பயணிக்கும்போது கல் வீச்சு அல்லது முட்டை வீச்சு தாக்குதல் நடத்தி, விபத்தை ஏற்படுத்தி எமது உயிரை பலியெடுக்க முடியும் என நினைக்கின்றீர்களா? அவ்வளவு எளிதில் எம்மை வீழ்த்திவிடமுடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

பாதுகாப்பு தொடர்பில் நாம் விழிப்பாகவே இருக்கின்றோம். எனது வாகனத்துக்கு ‘ஹெல்மட்டுடன்’ ஏறியவர் எனக்கு பாதுகாப்பு வழங்கும் தோழர். மழையால்தான் அவர் வாகனத்தில் ஏறினார். அதில் உள்ள தவறு என்ன? ” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

1763816381 road 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் மூடப்படுகிறது!

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல்...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...