10a4fce8 anura
அரசியல்இலங்கைசெய்திகள்

படுகொலைகளுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர் உயர் கதிரையில்! – அநுர

Share

” படுகொலைகளுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்  உயர் கதிரையில் அமர்ந்திருக்கையில், நாம் எப்படி வீதியில் சுதந்திரமாக நடமாடமுடியும்? ” – என்று கேள்வி எழுப்பினார் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு,

எமக்கான பாதுகாப்பை சுயமாக ஏற்படுத்திக்கொண்டுள்ளோம். நான் வாகனத்தில் பயணக்கும்போது, எமது கட்சி தோழர்கள் சூழ இருந்து பாதுகாப்பை வழங்குவார்கள்.

நாம் முட்டாள்தனமாக செயற்படுவதில்லை. முன்னாயத்தமாக இருப்பதால்தான் முட்டை வீச்சு தாக்குதல் நடத்த வந்தவர்களை மடக்கிபிடிக்ககூடியதாக இருந்தது. நுகேகொடை கூட்டத்துக்கு தாக்குதல் நடத்த வந்தவர்கள் தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்தக்கூடியதாக இருந்தது.

நான் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர், தோழர் நான் வருகின்றேன் என தெரியப்படுத்துவேன், உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும். நாளையும் நான் இப்படிதான் செயற்படுவேன்.

வாகனத்தில் பயணிக்கும்போது கல் வீச்சு அல்லது முட்டை வீச்சு தாக்குதல் நடத்தி, விபத்தை ஏற்படுத்தி எமது உயிரை பலியெடுக்க முடியும் என நினைக்கின்றீர்களா? அவ்வளவு எளிதில் எம்மை வீழ்த்திவிடமுடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

பாதுகாப்பு தொடர்பில் நாம் விழிப்பாகவே இருக்கின்றோம். எனது வாகனத்துக்கு ‘ஹெல்மட்டுடன்’ ஏறியவர் எனக்கு பாதுகாப்பு வழங்கும் தோழர். மழையால்தான் அவர் வாகனத்தில் ஏறினார். அதில் உள்ள தவறு என்ன? ” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...