இலங்கைசெய்திகள்

அப்பளத்தை எடுத்து உண்ட சிறுமிக்கு தாய் வாயில் சூடு!

அப்பளத்தை
Share

சமைத்து வைத்த உணவிலிருந்த அப்பளம் ஒன்றை தாயாருக்குத் தெரியாது எடுத்து சாப்பிட்ட காரணத்தால் 5 வயது மகளுக்கு தாய் வாயில் சூடு வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் கிளிநொச்சி அக்கராயன் விநாயகர் குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில் குறித்த தாய் அக்கராயன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிறுமியின் தந்தை தொழிலுக்கு சென்ற வேயை இந்தக் கொடூர செயல் இடம்பெற்றுள்ளது எனவும் இதனை அவதானித்த சிறுமியின் தாத்தா பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து தாயார் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அக்கராயன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் கைது செய்த தாயாரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...