பெண்களை பலவந்தமாக தள்ளி நெஞ்சிலேயே அடித்த ஆண் பொலிஸார்! கஜேந்திரன் சீற்றம்!!!
இலங்கைசெய்திகள்

பெண்களை பலவந்தமாக தள்ளி நெஞ்சிலேயே அடித்த ஆண் பொலிஸார்! கஜேந்திரன் சீற்றம்!!!

Share

பெண்களை பலவந்தமாக தள்ளி நெஞ்சிலேயே அடித்த ஆண் பொலிஸார்! கஜேந்திரன் சீற்றம்!!!

பெண்களை ஆண் பொலிஸார் பலவந்தமாக தள்ளி நெஞ்சிலேயே அடித்து மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

குருந்தூர்மலை பகுதியில் நேற்று (14.07.2023) பிரதோச தினத்தில் பொங்கல் நிகழ்வை முன்னெடுக்கவுள்ளதாக ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில் கல்கமுவ சந்தபோதி தேரர் இங்கு இனமுறுகல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குறித்த பொங்கல் நிகழ்வை தடுத்து நிறுத்துமாறும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திலும் கடந்த 11.07.2023 அன்று முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

இவற்றுக்கமைய முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றில் தடை உத்தரவினை கோரியிருந்த போதும் நீதிமன்றானது, அவ்வாறு வழிபாட்டிற்கு தடை விதிக்க முடியாது என்றும் விக்கிரகங்களை அங்கு பிரதிஸ்டை செய்யாமல் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கியிருந்தது.

இவ்வாறான சூழலில் குறித்த தேரர் தென்பகுதியில் இருந்து சிங்கள மக்களையும் தேரர்களையும் அழைத்து வந்து குருந்தூர்மலை விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார். இதன்போது அப்பகுதியில் தமிழ் மக்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு பொங்கல் நிகழ்விற்கும் இடையூறு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...