ali subri
இலங்கைசெய்திகள்

லொஹான் விவகாரம்! – நீதிபதி நியமனம்

Share

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க அரசு தீர்மானித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு கடந்த 12 ஆம் திகதி சென்ற லொஹான் ரத்வத்த அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவங்கள் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பவுள்ளன.

இவ்வாறு வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய நீதியமைச்சர் அலி சப்ரி,

அநுராபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்றது எனக் கூறப்படும் சம்பவங்கள் வன்மையாகக் கண்டிக்கப்படத்தக்கவை. அவை நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயலாகும்.

மேற்படி சம்பவங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை முன்னெடுக்க உயிர்நீதிமன்றில் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் விரைவில் நியமிக்கப்படவுள்ளார்.

இவை தொடர்பில் சி.ஐ.டியினர், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளை பாதுகாக்கும் அதிகாரசபை ஆகியவை விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

சிறைக்கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது – என்று நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 95099f5203
செய்திகள்இலங்கை

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரன்: வரவு செலவுத் திட்ட அமர்வுக்கு மத்தியில் உணர்வெழுச்சி!

தேச விடுதலைக்காகப் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21)...

images 1 11
செய்திகள்இலங்கை

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினோம்: சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் பணியவில்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

image e0f1498f29
செய்திகள்இலங்கை

தமிழ் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்: வேலணை சாட்டி துயிலும் இல்லத்தில் ஈகச் சுடரேற்றல் நிகழ்வு!

தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப...

Archchuna Ramanathan 1200px 24 11 22
செய்திகள்அரசியல்இலங்கை

பாராளுமன்ற உணவகத்தில் எம்.பி.க்கு கொலை மிரட்டல்: முஹம்மட் பைசல் மீது அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால், இன்று (நவ 21)...