செய்திகள்அரசியல்இலங்கை

மீனவர்கள் கோரிக்கைக்கு நீதித்துறை மதிப்பளிக்க வேண்டும்! – சுமந்திரன் எம்.பி கோரிக்கை

Share
sumanthiran scaled
Share

நீதித்துறைக்கு மதிப்பளித்த மீனவர்கள் வீதியை மறிக்காது விட்டதைப் போல அவர்களுடைய கோரிக்கைக்கு மதிப்பளித்து நீதித்துறை சரியானதை செய்ய வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்

இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இழுவை மடி தடைச் சட்டத்தினை சரியாக நீதித்துறை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரி சகல மீனவர்கள் சார்பாகவும் விரைவில் உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளோம்.

சுப்பர்மடத்தில் நடத்தப்பட்ட போராட்டம் மிகவும் சிறப்பானது. வீதியை மறித்து போராட வேண்டாம் என நீதித்துறை கட்டளையிட்டபொழுது அதனை மதித்து வீதியை விட்டு விலகினர்.

நீதித்துறைக்கு மதிப்பளித்த மீனவர்கள் வீதியை மறிக்காது விட்டதைப் போல அவர்களுடைய கோரிக்கைக்கு மதிப்பளித்து நீதித்துறை சரியானதை செய்ய வேண்டும்.

இது மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை மாத்திரமல்ல. தொடர்ச்சியாகப் பல சந்ததிகள் இங்கே தொழில் செய்வதற்கு வளங்கள் இருக்க வேண்டும்.

எங்களுடைய கடல் சுற்றுச்சூழல் இந்த விதமாக பாதிக்கப்படுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது. அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...