இந்திய இராணுவ பிரதான ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே நாளை செவ்வாய்க்கிழமைக்கு இலங்கைக்கு 5 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் அழைப்புக்கு அமைய இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது இந்திய இராணுவத் தளபதி ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளர் ஆகியோருடன் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நாளை மறுதினம் புதன்கிழமை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுடன் பத்திரமுல்லவிலுள்ள இராணுவ தலைமையகத்தில் ஊடக சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்திய படையினரின் பங்கேற்புடன் இடம்பெறும் ‘மித்ர சக்தி’ இராணுவ கூட்டு பயிற்சிகளின் இறுதி நிகழ்வுகளையும் பார்வையிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.