IMG 20230523 WA0112
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பழுதடைந்த உணவு விற்ற உணவகத்திற்கு சுகாதார பரிசோதகரால் வழக்கு தாக்கல்!

Share

பழுதடைந்த உணவு விற்ற உணவகத்திற்கு சுகாதார பரிசோதகரால் வழக்கு தாக்கல்!

யாழ்நகர் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகத்தில் சில தினங்களிற்கு முன்னர் பழுதடைந்த உணவினை வழங்கியதாக பொது மக்களால் யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பாலமுரளி அவர்களிற்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.
இதனையடுத்து நேற்றையதினம் 23.05.2023 அன்று வைத்தியர் பாலமுரளி தலைமையில் யாழ்நகர் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் குறித்த கடை திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது தொழிலாளர் இருவர் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் இருந்தமை மற்றும் மனித பாவனைக்கு உதவாத கோழி இறைச்சி, றொட்டி, சோறு என 20kg உணவு பொருட்களும் பழுதடைந்த பழங்களும் பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டது. இதனை தொடர்ந்து இன்றைய தினமே யாழ்நகர் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனால் குறித்த உணவக உரிமையாளரிற்கு எதிராக சான்று பொருட்களுடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கினை விசாரித்த மேலதிக நீதவான் சான்று பொருட்களை அழிக்குமாறு உத்தரவிட்டதுடன், கடை உரிமையாளரை ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதித்ததுடன், வழக்கினை எதிர்வரும் யூன் மாதம் 15ம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
IMG 20230523 WA0111 IMG 20230523 WA0113 IMG 20230523 WA0114 IMG 20230523 WA0115
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...