kar
அரசியல்இலங்கைசெய்திகள்

மக்களின் சுதந்திரத்தை அரசு நசுக்குகிறது!

Share

நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளான, பேச்சு, கருத்து மற்றும் அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கான சுதந்திரத்தை அரசாங்கம் ஆணவத்துடன் தொடர்ந்து நசுக்குகிறது என்று, கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று (08) தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டதுடன், அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் மற்றும் அவற்றுக்கு எதிராக அமைதியான போராட்டங்கள் அல்லது எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்தும் மனித உரிமைகளுக்கான போராட்டக்கார்களுக்கு எதிராக தற்போதுள்ள அரசாங்கத்தால் நடத்தப்படுவது கொடூரமான மற்றும் சகிக்க முடியாத அடக்குமுறையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறான மற்றும் நியாயமற்ற முறையில் முறையில் பயன்படுத்துவதற்கும், சமூகத் தலைவர்கள் மற்றும் அத்தகைய கொள்கைகளுக்கு அமைதியான எதிர்ப்பில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கும் நாங்கள் அரசாங்கத்தை கண்டிக்க விரும்புகிறோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் பிக்கு மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் உட்பட மூவர், அவர்கள் மீது தெளிவான குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படாமல் அநியாயமான முறையில் 75 நாட்களுக்கும் மேலாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் கர்தினால் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இந்த வகையான நெறிமுறையற்ற நடைமுறையை எந்த சூழ்நிலையிலும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இருவரும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது என்பதையும் குறிப்பிட்டார்.

அதேவேளை, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை, எவ்வித தீவிர உணர்வும் இன்றி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விடுதலை செய்ய பரிந்துரைக்கப்படும் முறையற்ற விதம் குறித்தும் எமது ஆச்சரியத்தை வெளிப்படுத்த விரும்புகின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...