Vijitha kerath.jpg
இலங்கைஅரசியல்செய்திகள்

இனியும் நொண்டிச்சாக்குகளை அரசு சொல்ல முடியாது – விஜித ஹேரத்

Share

கொவிட் -19 தொற்று நோயை முன்னிறுத்தி அரசாங்கம் தனது தோல்விகளை மறைக்கப் பார்க்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசின் இந்த நொண்டி சாக்குகளை மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்தகாலங்களில் யுத்தங்களை முன்னிறுத்தி தமது தோல்விகளை மறைத்திருந்தது. ஆனால் தற்போது கொரோனாவைக் காரணம் காட்டுகிறது என பாராளுமன்றில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்;

நாடு இன்று பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. எரிவாயு, உரம், அரிசி மற்றும் காய்கறிகளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்த பிரச்சினைகளுக்கும் கொவிட் தொற்று நோய்க்கும் எந்த தொடர்பும் இல்லை.

பிராந்தியத்திலுள்ள பிற நாடுகள் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. எடுத்துக்காட்டாக, பங்களாதேஷ் பொருளாதார வளர்ச்சி 3% மற்றும் வெளிநாட்டு இருப்பு 40 பில்லியன் அமெரிக்க டொலர்களை பதிவு செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 5
இலங்கைசெய்திகள்

WhatsApp பயன்படுத்தும் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் அண்மைய காலமாக WhatsApp ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக...

11 5
இந்தியாசெய்திகள்

அழுத்தத்தில் தவெக – விஜயின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: உள்ளே நுழையும் மோடி அரசு

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் பாதுகாப்பு குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த விடயம்...

13 5
இந்தியாசெய்திகள்

சாரதி அனுமதி பத்திர விநியோகத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது....

10 5
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு மோகம் காட்டி மோசடி! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இஸ்ரேலில் விவசாய வேலை வாய்ப்புகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதாகக் கூறி சில தனிநபர்கள் அல்லது குழுக்கள் சமூக...