Vijitha kerath.jpg
இலங்கைஅரசியல்செய்திகள்

இனியும் நொண்டிச்சாக்குகளை அரசு சொல்ல முடியாது – விஜித ஹேரத்

Share

கொவிட் -19 தொற்று நோயை முன்னிறுத்தி அரசாங்கம் தனது தோல்விகளை மறைக்கப் பார்க்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசின் இந்த நொண்டி சாக்குகளை மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்தகாலங்களில் யுத்தங்களை முன்னிறுத்தி தமது தோல்விகளை மறைத்திருந்தது. ஆனால் தற்போது கொரோனாவைக் காரணம் காட்டுகிறது என பாராளுமன்றில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்;

நாடு இன்று பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. எரிவாயு, உரம், அரிசி மற்றும் காய்கறிகளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்த பிரச்சினைகளுக்கும் கொவிட் தொற்று நோய்க்கும் எந்த தொடர்பும் இல்லை.

பிராந்தியத்திலுள்ள பிற நாடுகள் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. எடுத்துக்காட்டாக, பங்களாதேஷ் பொருளாதார வளர்ச்சி 3% மற்றும் வெளிநாட்டு இருப்பு 40 பில்லியன் அமெரிக்க டொலர்களை பதிவு செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...