சர்வதேச ஒலிம்பிக் பொதுச்சபைக் கூட்டத்தில் வரலாற்றில் முதற் தடவையாக தமிழர் ஒருவர் உரையாற்றவுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த சிவராஜா கோபிராஜ் என்பவரே எதிர்வரும் ஒக்ரோபர் மாத இறுதியில் மெய்நிகர் வழியூடாக நடத்தப்படும் நிகழ்வில் இவ்வாறு உரையாற்றவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை ஒலிம்பிக் சம்மேளனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் ஊடகத்துறை முகாமையாளராக இவர் கடமையாற்றி வருகிறார்.
இவர் யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment