kar
அரசியல்இலங்கைசெய்திகள்

உலகம் முழுதும் கையேந்த வேண்டிய நிலையில் நாடு!

Share

” வானுயர கோபுரம் அமைக்கப்பட்ட நாட்டில், பட்டினியால் பிள்ளைகள் மயங்கி விழுகின்றனர். முறையற்ற அபிவிருத்தி நடவடிக்கைகளால் உலகம் முழுதும் கையேந்த வேண்டிய நிலையில் நாடு உள்ளது. எனவே, ஆட்சியாளர்களுக்கு பதிலளிப்பதற்கு உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.”

இவ்வாறு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் நடுத்தர வர்க்கத்தினர் – மத்திய வருமானம் பெறுபவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டவர்களும் தற்போது வறுமையின் பிடிக்குள் சிக்கியுள்ளனர்.

பாரிய பெருந்தெருக்கல் அமைக்கப்பட்டன. வானுயர கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டது. ஆனால் விமானம் வருவதில்லை. நாட்டு மக்களுக்கு ஒருவேளை உணவுகூட பெரும் சவாலாக மாறியுள்ளது.

சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக நத்தார் காலத்தில் கொழும்பை சொர்க்க புரியாக்க போகின்றார்களாம். ஆனால் நாட்டு மக்களுக்கு உண்பதற்கு உணவு இல்லை. அறநெறி பாடசாலைக்கு வரும் மாணவர்கள் மயங்கி விழுகின்றனர். உலகம் முழுவதும் கையேந்தப்படுகின்றது. எனவே, போலி நடவடிக்கைகள் வேண்டாம்.

அதேவேளை, உள்ளாட்சி சபைத் தேர்தல் அடுத்த வருடம் மார்ச் மாதம் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். அரசியல் அழுத்தங்களுக்கு பணிந்து தேர்தலை பிற்போட வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொள்கின்றோம். தேர்தல் என்பது எமக்கான உரிமை. அரசாங்கத்துக்கு பதிலளிக்க வாய்ப்பு வேண்டும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...