wedding scaled
இலங்கைசெய்திகள்

அச்சுவேலி – மணமக்களுக்கு எதிராக வழக்கு!

Share

அச்சுவேலி வடக்கில் இன்று இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் சுகாதார விதிமுறைகளை மீறி நிகழ்வு நடைபெற்றுள்ளது என பொலிஸாரால் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன் திருமண நிகழ்வில் பங்கேற்றோரை அங்கிருந்து அனுப்பிவிட்டு மணமக்கள் உள்ளிட்ட சிலரிடம் கொரோனாத் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் 100 க்கும் மேற்பட்டோர் பங்குபற்றியுள்ளனர் என பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து, அத் திருமண நிகழ்வுக்கு சென்ற பொலிஸார் விருந்தினரை வெளியேறுமாறு பணித்து மணமக்களுக்கும் அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கும் கொரோனாத் தொற்று சோதனை மேற்கொள்ள பணித்துள்ளனர்.

அத்துடன் சுகாதார விதிமுறைகளை மீறி திருமண நிகழ்வை ஒழுங்கு செய்தவர்கள் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 15 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அச்சுவேலி பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...