யாழ்ப்பாணத்தின் பிரபல காப்புறுதி நிறுவனத்தின் முகாமையாளர் செலுத்திய கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று இரவு இடம் பெற்றுள்ளது.
வாகனத்தின் சாரதி மது போதையில் வாகனம் செலுத்தியதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான கார் வாகனத்தினை கனரக வாகனத்தின் உதவியுடன் கடலுக்குள் இருந்து மீட்கும் நடவடிக்கையினை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக போக்குவரத்து சட்ட விதிமுறைகளுக்கு அமைய வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ,
மேலதிக விசாரணையை ஊர் காவல்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment