bDJ0DiS
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நடந்து சென்ற சிறுவனை மோதிய பேருந்து! – உறவர்களால் மடக்கி பிடிப்பு

Share

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த இளைஞனை மோதி விட்டு தப்பி சென்ற தனியார் பேருந்து சாரதியை ஊரவர்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கீரிமலை பிரதான வீதியில் சேந்தான்குளம் பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த நோபேர்ட் நிலக்ஸன் (வயது 19) எனும் இளைஞனை பின் புறமாக வந்த தனியார் பேருந்து ஒன்று மோதி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்ததுடன் , விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற பேருந்தினை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.

அதன் போது பேருந்தின் சாரதி மது போதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பேருந்தின் சாரதியையும் , பேருந்தினையும் இளவாலை பொலிஸாரிடம் ஊரவர்கள் ஒப்படைத்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...