1671332724 body 2
இலங்கைசெய்திகள்

சாவகச்சேரி இளைஞனின் சடலம் நாட்டுக்கு!

Share

வியட்நாமில் தற்கொலை செய்துகொண்ட, சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் நேற்று மாலை விமானம் மூலமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வைத்தியசாலையில் உறவினர்கள் கூடியுள்ள நிலையில், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், கப்பல் மூலமாக கனடா செல்ல முற்பட்டிருந்த நிலையில் வியட்நாம் கடற்பரப்பில் 300க்கும் மேற்பட்ட இலங்கையர்களுடன் சென்ற மீன்பிடி கப்பல் சேதமடைந்து, தத்தளித்துக் கொண்டிருந்துள்ளது.

அதனையடுத்து அவர்களை ஜப்பானிய கப்பல் அதிகாரிகள் மீட்டு வியட்நாமில் கரை சேர்த்தனர். அங்கு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை வியட்நாம் அதிகாரிகள் மேற்கொண்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு இலங்கையர்கள் தற்கொலைக்கு முயற்சித்திருந்தனர்.

அதனையடுத்து உடனடியாக அவர்கள் இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் ஆபத்தான கட்டத்தில் இருந்ததையடுத்து அவர் உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவரின் சடலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, நீண்ட நாட்களின் பின்னர் சடலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 4 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கீரி சம்பாவை அதிக விலைக்கு விற்றமை மற்றும் ‘லங்கா பாஸ்மதி’ எனப் போலிப் பற்றுச்சீட்டு வழங்கிய கடைக்கு அபராதம்!

கீரி சம்பா அரிசியை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்றமை மற்றும் ‘லங்கா பாஸ்மதி’...

kajendrakumar
அரசியல்இலங்கைசெய்திகள்

சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டியை வலியுறுத்த த.தே.ம.மு குழுவினர் இவ்வாரம் சென்னை பயணம்!

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக, தமிழர் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை...

kajendrakumar
அரசியல்இலங்கைசெய்திகள்

25,000 ரூபாய் கொடுப்பனவு 50% பேருக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையில், தற்போது வழங்கப்படும் 25,000 ரூபாய் கொடுப்பனவானது...

images 4 4
இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவியை கூட்டு வன்கொடுமை செய்த பாடசாலை மாணவன் உட்பட நால்வர் கந்தளாயில் கைது!

டிக்டொக் சமூக ஊடகம் மூலம் அறிமுகமான பாடசாலை மாணவி ஒருவரை, கந்தளாய் ஈச்சலம்பற்று கடற்கரைப் பகுதியில்...