IMG 20221022 153900
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிறுமியின் சங்கிலியை அறுத்த இராணுவச் சிப்பாய்மடக்கிப் பிடிப்பு!

Share

வலி.வடக்கு பலாலி வள்ளுவர் புரத்தில் தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்று வந்த சிறுமியின் சைங்கிலியை அபகரித்த இராணுவச் சிப்பாய் ஊர் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று (22) மதியம் இடம்பெற்றது. வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த சிறுமியை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இராணுவச் சிப்பாய் சங்கிலியை அபகரித்து விட்டு மாணவியையும் கீழே தள்ளி விட்டுச் சென்றுள்ளார்.

காயமடைந்த சிறுமி தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமியின் சங்கிலியை அபகரித்த இராணுவச்சிப்பாய் ஊர் மக்களினால் பிடிக்கப்பட்டு பலாலி பொலிஸ் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில், பொதுமக்களுக்கும் இராணுவத்திற்கும் முறுகல் நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

#Srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...