26 12
இலங்கைசெய்திகள்

சிங்கள பேரினவாதிகளின் செயற்பாட்டினால் கோரப்பட்ட தமிழீழம்

Share

தனி நாடு கோரி ஒரு இனம் போராடிய வரலாற்றை இந்த நாடு கொண்டுள்ளது என்றும், நாட்டில் உள்ள சிங்கள பேரினவாதிகளுடன் வாழ முடியாது என தமிழீழத்துக்காக அந்த இனம் பல உயிர்களை வழங்கியுள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் கடுமையாக உரையாற்றியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(21) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தமிழீழத்துக்கான மற்றும், தமது மண்ணுக்கான போராடி உயிரிழந்த இனத்தின் வரலாற்றை இந்த நாடு கொண்டுள்ளது. சயனைட் குப்பிகளை அணிந்துக்கொண்ட போராட்டமது.

30000 தொடக்கம் 40000 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழர்களும், சிங்களவர்களும், இராணுவத்தினரும் இதில்கொல்லப்பட்டுள்ளனர். அப்பாவி முஸ்லீம் மக்கள் அகதிகளாக்கப்பட்டனர்.

இதனை மறந்து இன்று நாடாளுமன்றில் நீங்கள்(ஆளும் தரப்பு) பேசலாம். ஆனால் மக்களினுடைய வேதனைகள் உள்ளங்களில் இருந்துக்கொண்டே இருக்கின்றன.

மேலும், இதுவரையில் பண்முகப்படுத்தப்பட்ட நிதி தொடர்பில் எந்த விதமான அறிக்கையும் எங்களுக்கு கிடைக்கவில்லை. நாங்களும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களே.

மக்களுக்கான சேவையை செய்யவேண்டிய தேவை எமக்கும் உள்ளது. அப்படியென்றால் எதிர்கட்சியை பக்கசார்பாக பார்ப்பது நியாயம் இல்லாத ஒன்று.

அதேபோல நாடாளுமன்ற உறுப்பினர்களினுடைய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் அசமந்தமாக செயற்படுகிறது. பாதுகாப்பு இந்த நாட்டில் சீராக இருந்தால் பயமில்லை.

ஆனால் நமது நாட்டில் சாதாரண மக்களும் கொல்லப்படுகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டிய பொறுப்பு சபாநாயகருக்கு இருக்கிறது.

ஆனால் சபாநாயகரோ ஒரு பொம்மைபோல இருக்கின்றார். ஒருநாள் கூட எதிர்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்காத சபாநாயகரை முதன் முதலாக நாங்கள் காண்கின்றோம்.

24 ஆண்டுகளாக நாடாளுமன்றில் இருந்தும் இப்படிபட்ட ஒரு பொம்மை, சபாநாயகராக பதவி வகிக்கவில்லை” என கடும் தொனியில் கருத்து தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...

25 690c956ec39eb
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து: மின் ஒழுக்கு காரணமெனத் தகவல்!

திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள ஒரு தனியார் கண்...

Vithiya
இலங்கைசெய்திகள்

வித்தியா கொலை வழக்கு: சுவிஸ் குமார் உட்பட 7 பிரதிவாதிகள் மேன்முறையீட்டு மனு விசாரணை நிறைவு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தி, கூட்டுப்...