theras
அரசியல்இலங்கைசெய்திகள்

20ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்! – மகாநாயக்க தேரர்கள் கூட்டாக வலியுறுத்து

Share

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்று மகாநாயக்க தேரர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

அஸ்கிரிய பீடம், மல்வத்த பீடம் உட்பட நாட்டிலுள்ள பிரதான மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் இன்று கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையிலேயே இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

20 ஐ நீக்கிவிட்டு, 19 ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்த, சிறந்த அம்சங்களை உள்ளடக்கிய வகையிலான அரசமைப்பு திருத்தம் அவசியம் எனவும் கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், புதிய அமைச்சரவை நியமனம் பிரச்சினைக்கு தீர்வு அல்லவெனவும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...