பிள்ளையார் சிலைக்கு மேல், புத்தர் சிலையொன்று இனந்தெரியாதவர்களினால் வைக்கப்பட்டிருந்தமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருகோணமலை – மூதூர் 64 ஆம் கட்டை மலையள்ளையார் ஆலயத்தில் உள்ள பிள்ளையார் சிலைக்கு மேல், புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டமையால். இன்று (25) சற்று பதற்றநிலை தோன்றியுள்ளது.
இச்சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று மூதூர் பிரதேச இந்துக் குருமார்களால் அவ்விடத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதற்கு முன்னர் வைக்கப்பட்ட அச் சிலையானது மூதூர் பொலிஸாரினால் எடுத்துச் செல்லப்பட்டது.
இதேவேளை மூதூர் பிரதேச இந்துக் குருமார்களும், பொதுமக்களும் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றபோது, மூதூர் கொட்டியாராம விகாராதிபதி அவ்விடத்திற்கு வருகை தந்தபோது சற்று பதற்ற நிலையும் வாய்த்தர்க்கமும் ஏற்பட்டது.
இதேவேளை 64 ஆம் கட்டை மலையடி பிள்ளையார் ஆலயமானது பல வருடகாலமாக அருகிலுள்ள கிராம மக்களானாலும், திருகோணமலை – மட்டக்களப்பு வீதியூடாக பயணம் மேற்கொள்கின்ற பொதுமக்களாலும் வழிபாடு செய்யப்படுகின்ற ஆலயமென்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் குறித்த புத்தர் சிலையினை அந்த இடத்தில் வைத்தது யார் என்பது இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment