Theepan scaled
இலங்கைசெய்திகள்

ஆசிரியர்களின் எரிபொருள் பிரச்சினைக்கு இதுவரை தீர்வில்லை! – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

Share

கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட கரைச்சி கோட்டத்தில் உள்ள பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொடுக்க கல்வி வலயத்தினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இதுவரையில் கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட கரைச்சி கோட்டத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கு எரிபொருளை பெறுவதற்கான எரிபொருள் பங்கிட்டு அட்டையை வழங்குவதற்கு கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

ஆசிரியர்கள் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். இந்த விடயத்தில் கரைச்சி கோட்டக்கல்வி பணிப்பாளர் மற்றும் கிளிநொச்சி தெற்கு கல்வி வலய பணிப்பாளர் ஆகியோரே இதற்கு முழு பொறுப்பாகும்.

ஆகவே இந்த விடயத்தில் கவனம் செலுத்தி ஆசிரியர்களுக்கு எரிபொருள் பங்கீட்டு அட்டையை வழங்குகின்ற செயற்பாடுகளை வடக்கு மாகாண கல்வி அமைச்சு கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...