24 662f1044ed3f9
இலங்கைசெய்திகள்

தேயிலை பெருந்தோட்டத்துறை தொடர்பில் எச்சரிக்கை

Share

தேயிலை பெருந்தோட்டத்துறை தொடர்பில் எச்சரிக்கை

தேயிலை பெருந்தோட்டத்துறை வங்குரோத்து அடையும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொசான் ராஜதுரை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

பெருந்தோட்டத்துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

உற்பத்தி வினைத்திறனை அடிப்படையாகக் கொண்ட சம்பள அதிகரிப்பு முறைமையே உசிதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உற்பத்தி வினைத்திறனை கருத்திற் கொள்ளாத சம்பள அதிகரிப்புக்கள் ஒட்டுமொத்த பெருந்தோட்டத்துறையை வங்குரோத்து அடையச் செய்துவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாள் சம்பளத்தை 1700 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

பெருந்தோட்டத் தொழிலாளி ஒருவர் நாளொன்றுக்கு சுமார் இரண்டாயிரம் ரூபா சம்பளம் ஈட்டக்கூடிய யோசனை ஒன்றை தமது சம்மேளனம் முன்மொழிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த முன்மொழிவானது உற்பத்தி வினைத்திறனை அடிப்படடயாகக் கொண்டது என அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டாக இணைந்து கிரமமான ஓர் முறையின் கீழ் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...