1668160407 baral tanki 2
இலங்கைசெய்திகள்

‘எத்தனோல்’க்கு வரி அதிகரிப்பு

Share

எத்தனோல் இறக்குமதி வரியை மீண்டும் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க நிதி அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று காலத்தின் போது, ​​கிருமிநாசினி திரவ உற்பத்தியில் எத்தனோல் பயன்படுத்தப்பட்டதால் இறக்குமதி வரி குறைக்கப்பட்டது.

இவ்வாறு வரியை மீண்டும் அதிகரிப்பதன் மூலம் 1.6 பில்லியன் ரூபா வருமானத்தை அரசாங்கம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் தொற்று காலத்தில் எத்தனோல் வரி 2020 ஏப்ரல் 30 மற்றும் 2020 ஜூன் 09 ஆகிய இரு சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்டது.

இந்நிலையில் ஒரு லீற்றருக்கு 25 ரூபாவாக இருந்த வற் வரியை 50 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஜனவரி மாதம் 25 ரூபாவாக குறைக்கப்பட்ட போதிலும், வாடிக்கையாளருக்கு பலன் கிடைக்காத காரணத்தினால், வரியை மீண்டும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...