” நாம் தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்லர், அவர்கள் எம்முடன் இணையலாம்.” – என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையைப் பயன்படுத்தி தமது இலக்கை அடைவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது. ஆயுதம்மூலம் அடைய முடியாமல்போனதை டொலர்மூலம் பெற முற்படுகின்றனர். இந்த அரசியலையே நாம் எதிர்க்கின்றோம். மாறாக தமிழ் மக்களை எதிர்க்கவில்லை. அவர்களும் எமது பயணத்தில் இணையலாம்.
இந்நாட்டில் மீண்டும் குடும்ப ஆட்சி ஏற்பட இடமளிக்கமாட்டோம். ” -என்றார்.
#SriLankaNews