26 12
இலங்கைசெய்திகள்

தேர்தலில் தமிழர்களிடையே பிளவு : இந்திய ஊடகம் எடுத்துரைப்பு

Share

தேர்தலில் தமிழர்களிடையே பிளவு : இந்திய ஊடகம் எடுத்துரைப்பு

இலங்கையின் ஏமாற்றமடைந்த தமிழர்கள் இந்த தேர்தலில் பிளவுபட்டுள்ளனர் என்று இந்திய செய்தித்தாள் ஒன்று கருத்துரைத்துள்ளது.

நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள கோரிக்கைகள் தொடர்பாக தென்னிலங்கைத் தலைமையுடனான ஏமாற்றம் மற்றும் பிளவுபட்ட தமிழ் அரசியல் என்பன அவர்களை வெவ்வேறு தெரிவுகளைக் கருத்தில் கொள்ள வழிவகுத்துள்ளதாக குறித்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் வடபகுதி தமிழ் வாக்காளர்கள், போரினால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு அடுத்தடுத்த அரசாங்கங்களின் முயற்சிகள் போதுமானதாக இல்லை என்று கூறுகின்றனர்.

இதற்கிடையில், நீதி மற்றும் அரசியல் தீர்வுக்கான அவர்களின் கோரிக்கைகளும் தொடர்கின்றன. இந்தநிலையில் இலங்கையின் வடபகுதி தமிழ் வாக்காளர்கள், இந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய ஒரு வேட்பாளருக்கும் நிச்சயமாக தோற்கக்கூடிய ஒருவருக்கும் இடையில் இரண்டு பிரிவுகளாக மாறியுள்ளனர்.

தமிழர்களில் சிலர், சிங்கள வேட்பாளர்களில் முன்னணியில் உள்ள ஒருவருக்கு ஆதரவளித்து வரும் நிலையில், சிலர் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளனர்.

இலங்கையின் தேர்தல் வரைபடத்தின் இலக்கண யதார்த்தத்தின் அடிப்படையில், இலங்கை நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கை தளமாகக் கொண்ட சில அரசியல் மற்றும் சிவில் சமூகக் குழுக்களால் கூட்டாக களமிறக்கப்பட்ட தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனால் வெற்றிபெற முடியாது என்பது ஒவ்வொரு தமிழ் வாக்காளருக்கும் நன்றாகத் தெரியும்.

எனினும் தங்கள் குறைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகவே தமிழ் பொதுவேட்பாளரை தமிழ் வாக்காளர்கள் ஆதரிப்பதாக இந்திய நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...