26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

Share

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S. Shritharan) தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் பகுதியில் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடங்கள் இன்று சிங்கள குடியேற்றங்களுக்கான இடமாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

அண்மைய நாட்களில் சம்பந்தன் ஐயா தலைமையில் பல பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால் நாங்கள் இன்னும் முன்னேற முடியாத நிலையிலே உள்ளோம்.

நாங்கள் ஒப்பந்தங்களால் ஏமாற்றப்பட்டோம் ரணில் பிரபா ஒப்பந்தம் இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் தீர்வு கிடைக்கும் என நினைத்தோம் எல்லாமே எங்களுக்கு முன்னால் இல்லாமல் போனது.

மேலும் தெரிவிக்கயைில், காலம் காலமாக சிங்கள தலைவர்களால் ஏமாற்றப்பட்டோம்.

அறவழிப்போராட்டங்கள் தோற்கடிக்கப்பட்ட போதே எமது இளைஞர் ஆயுதத்தை எடுத்தனர். குறிப்பாக, எங்களுடைய இறைமையை மீட்டெடுக்க போராடுகின்றோம்.

கடந்த 10ஆண்டுகளாக சம்பந்தன் தலைமையில் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதும் நாம் ஒரு சாண் கூட முன்னேற முடியவில்லை.

28ஆம் திகதி வர்த்தமானி வெளிவந்திருக்கிறது. அரசு உரிமை கோராத காணிகளை சுவீகரிக்க முனைகிறது. இதில் சிங்கள குடியேற்றத்தை நிறுவ நினைக்கின்றனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் பலர் காணியின்றி உள்ளனர்.

பிமல் ரத்நாயக்கா கேட்கின்றார் உப்பின் பெயர் வேணுமா சுவை வேணுமா என்று எங்களுடைய மண்ணுக்குரிய பெயரை மாற்ற முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரை புத்தாண்டு பாதுகாப்பு: நாடு முழுவதும் 10,000 பொலிஸார் விசேட கடமையில்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டுப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நாடு தழுவிய ரீதியில் விசேட...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் விநியோகம் உறுதி: பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

இலங்கைக்குத் தேவையான எரிபொருளை ரஷ்யாவிடமிருந்து பெற்றுக்கொள்வது தற்போது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்...

Untitled 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொச்சிக்கடையில் சட்டவிரோத டீசல் கையிருப்பு: 35 வயதுடைய நபர் கைது!

கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள கொச்சிக்கடை, தலுவகொட்டுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் டீசலை வைத்திருந்த 35...

Untitled 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் போதைப்பொருள் வர்த்தகத்தை இயக்கும் 5 முக்கிய சூத்திரதாரிகள்: டுபாய் மற்றும் ஐரோப்பாவிலிருந்து செயற்படுவது அம்பலம்!

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட போதிலும், நாட்டின் ஒட்டுமொத்த போதைப்பொருள்...