24 660f7f8223497
இலங்கைசெய்திகள்

உக்ரைனைப் போல் ஈழமக்களையும் அமெரிக்கா ஆதரிக்கவேண்டும்!

Share

உக்ரைனைப் போல் ஈழமக்களையும் அமெரிக்கா ஆதரிக்கவேண்டும்!

ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்து அவர்களின் அவலநிலையை நிவர்த்தி செய்யுமாறு அமெரிக்க ராஜாங்க செயலாளர் அந்தணி பிளிங்கனிடம் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதி விலி நிக்கல் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, காங்கிரஸின் பத்து உறுப்பினர்கள் குழு, அமெரிக்க அண்டனி பிளிங்கனை, ஐக்கிய நாடுகள் சபைக்குள் அமெரிக்கத் தலைமையில், ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளுக்காக வாதிட வேண்டும் வலியுறுத்தியுள்ள நிலையில், விலி நிக்கலின் ட்வீட் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அமெரிக்க காங்கிரசின் 10 உறுப்பினர்கள், பிலிங்கனுக்கு, எழுதிய கடிதத்தில், “குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைப்பதும், ஐக்கிய நாடுகளின் சாசனம் மற்றும் அமெரிக்க கோட்பாடுகளுக்கு ஏற்ப தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியாக அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க உதவுவது, இலங்கையில் நல்லிணக்கத்திற்கும் முன்னேற்றத்திற்கும் இன்றியமையாதது” என்று குறிப்பிட்டிருந்தனர்.

நீடித்து வரும் பிரச்சினைக்கு அமெரிக்கா தீர்வு காண வேண்டும். அத்துடன் உக்ரைன், கொசோவோ, கிழக்கு திமோர், தெற்கு சூடான் போன்றவற்றில் சுயநிர்ணய உரிமைக்கான அமெரிக்காவின் ஆதரவு, ஈழத் தமிழர் தீர்விலும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்று குறித்த 10 காங்கிரஸ் உறுப்பினர்களும், பிளிங்கனிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.

Share
தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...