721187541parliamnet5 1
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்வக்கட்சி அரசமைப்பதற்கான பேச்சுகள் தீவிரம்!

Share

சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்காக எதிரணிகளை ஓரணியில் திரட்டி – பொது நிலைப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பங்களிப்புடனேயே இதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.ஜே.வி.பி. உறுப்பினர்களைதவிர, எதிரணி மற்றும் சுயாதீன அணிகளின் 37 உறுப்பினர்கள்வரை இச்சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களை தடையின்றி விநியோகித்தல், 19 ஐ மீள செயற்படுத்தல் உட்பட முக்கிய சில விடயங்களை நிறைவேற்றுவதற்காகவே சர்வக்கட்சி அரசு அமையவுள்ளது.

இதற்கு ஆரம்பக்கட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இன்றும் பேச்சுகள் தொடரவுள்ளன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால்தான் சர்வக்கட்சி அரசமைப்பதற்கான 113 என்ற அறுதிப்பெரும்பான்மையை பெறலாம். எனவே, மொட்டு கட்சி உறுப்பினர்களுடனும் சந்திப்புகள் இடம்பெறவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...