தலவாக்கலை நகரில் பழங்கள் மற்றும் மரக்கறி விற்பனை செய்து வந்த கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது எனத் தலவாக்கலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் தீ விபத்து நேற்றிரவு 10 மணியளவில் ஏற்பட்டுள்ளது எனப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
தலவாக்கலைப் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் ஒரு மணித்தியாலயங்களுக்குப் பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
குறித்த கடையின் உரிமையாளர் மற்றும் அவரின் உதவியாளர் கடையில் இல்லாதபோதே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயால் மரக்கறி மற்றும் பழங்கள் முற்றாகத் தீக்கிரையாகியுள்ளன.
எனினும், தீ விபத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை கணிக்கப்படவில்லை.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் தலவாக்கலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews