PO
இலங்கைசெய்திகள்

தருமபுரம் பகுதியில் பொலிஸார் மீது வாள்வெட்டு!

Share

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது 4 பொலிஸார் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தருமபுரம் கல்மடு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

மணல் வியாபாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் வன்முறைச் சம்பவம் இடம்பெறுகிறது என அவசர சேவை இலக்கமான 119 இற்கு அந்தப் பகுதி மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு வந்த விசேட பொலிஸ் பிரிவினர் மீதே இவ்வாறு வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இரு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 11
செய்திகள்அரசியல்இலங்கை

மத்திய கிழக்கு போர்ச் சூழல்: இலங்கையின் பாதுகாப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் சஜித் பிரேமதாசவின் 4 முக்கிய பரிந்துரைகள்!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தக்கூடிய...

09 11
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை ஊடாக இந்தியக் கப்பல்கள்: ஈரான் அனுமதி வழங்கியதாகத் தகவல்; ஆனால் டெஹ்ரான் மறுப்பு!

ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், இந்தியக் கொடியுடன் பயணிக்கும் எண்ணெய் கொள்கலன்களை (Oil...

08 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

‘சிசு செரிய’ பாடசாலை போக்குவரத்து சேவை விஸ்தரிப்பு: 200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இணைப்பு!

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ‘சிசு செரிய’ (Sisu...

07 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதல்: போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் முன்வைத்துள்ள 3 நிபந்தனைகள்!

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு,...