jail arrested arrest prison crime police lock up police station shut
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வாள்வெட்டு தாக்குதல்! – 24 வயது இளைஞன் கைது

Share

வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் ஒருவர் (வயது-24) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் 11.30 மணியளவில் கல்வியங்காடு பகுதியில் புடவை வியாபாரத்தில் ஈடுபடும் இளம் வர்த்தகர் மீது நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்பாக வாள்வெட்டு நடத்திய குற்றச்சாட்டிலேயே குறித்த நபர் கைதாகியுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த வர்த்தகர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

கைதான நபர் மீது கொக்குவில் மற்றும் மானிப்பாய் பகுதிகளில் வன்முறைகளில் ஈடுபட்ட நிலையில் நீதிமன்றங்களில் ஏற்கனவே குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஆரம்ப கட்ட விசாரணைகளின்படி, காசுக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் உள்ள முரண்பாடு காரணமாக இந்த வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றது என தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதலில் இருவர் தொடர்புபட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான நபர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...