jail arrested arrest prison crime police lock up police station shut
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வாள்வெட்டு தாக்குதல்! – 24 வயது இளைஞன் கைது

Share

வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் ஒருவர் (வயது-24) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்றுமுன்தினம் 11.30 மணியளவில் கல்வியங்காடு பகுதியில் புடவை வியாபாரத்தில் ஈடுபடும் இளம் வர்த்தகர் மீது நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்பாக வாள்வெட்டு நடத்திய குற்றச்சாட்டிலேயே குறித்த நபர் கைதாகியுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த வர்த்தகர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

கைதான நபர் மீது கொக்குவில் மற்றும் மானிப்பாய் பகுதிகளில் வன்முறைகளில் ஈடுபட்ட நிலையில் நீதிமன்றங்களில் ஏற்கனவே குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஆரம்ப கட்ட விசாரணைகளின்படி, காசுக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் உள்ள முரண்பாடு காரணமாக இந்த வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றது என தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதலில் இருவர் தொடர்புபட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான நபர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
codf 1671799699
உலகம்செய்திகள்

16 ஆண்டுகால திருமண பந்தம் முறிவு: முடி கொட்டியதால் மனைவியை கைவிட்ட கணவன் – சீனாவில் ஒரு சோகம்!

சீனாவில் 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவிக்கு ஏற்பட்ட சரும நோயால் முடி கொட்டியதைக்...

tjv16cjg mohsin naqvi shahbaz sharif 625x300 26 January 26
செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல்? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் இன்று அவசரச் சந்திப்பு!

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புற்றுநோய் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்து குறித்து CID-யில் முறைப்பாடு!

நாட்டின் புற்றுநோய் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக...

DxCjISGeXs
இந்தியாசெய்திகள்

ஆசியாவில் நிபா வைரஸ் அச்சம்: முக்கிய வானூர்தி நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் – 75% உயிரிழப்பு விகிதம் கொண்ட உயிர்கொல்லி!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா (Nipah) வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,...