IMG 8708
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விவாதம் வேண்டும் என்கிறார் ரஞ்சித் மத்தும பண்டார

Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் மீண்டும் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கோரிக்கை விடுத்தார்.

இதற்காக இரு நாட்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் இன்று நாடாளுமன்றத்தில் விடுத்தார்.

” நான் சட்டம், ஒழுங்கு அமைச்சராக இருந்தபோது அரச உளவுப்பிரிவின் அறிக்கையொன்று கிடைத்தது. இது தொடர்பில் சிஐடி மற்றும் ரிஐடி பணிப்பாளர்களுடன் நான் கலந்துரையாடினேன்.

இதன்பிரகாரம் சஹ்ரானை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றன. நீதிமன்றத்தில் நீல பிடியாணை பெறப்பட்டிருந்தது.

ஆனால் 52 நாட்கள் அரசியல் சூழ்ச்சியின்போது சட்டம், ஒழுங்கு அமைச்சு பதவியில் இருந்து நான் மாற்றப்பட்டேன். திடீரென நாமல் குமார என ஒருவர் வந்தார்.கொலை சூழ்ச்சி பற்றி கருத்து வெளியிட்டார். ரிஐடி பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நாமல் குமார விவகாரத்துக்கு என்ன நடந்தது? சஹ்ரான் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டது ஏன்?

எனவே, இந்த சம்பவத்தின் பின்னணி என்னவென்பது மக்களுக்கு தெரியும். அவர்கள்தான் இன்று எம்மீது கைநீட்டுகின்றனர்.” – ரஞ்சித் மத்தும பண்டார் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share
தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...