15 4
இலங்கைசெய்திகள்

ரணிலுக்கு ஆதரவளிப்பதற்காக பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிளில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்

Share

ரணிலுக்கு ஆதரவளிப்பதற்காக பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிளில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, மோட்டார் போக்குவரத்து திணைக்கள சட்டம் மற்றும் வீதி போக்குவரத்து சட்டத்தை மீறி பதிவு செய்யப்படாத உயர் இயந்திர திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களில் பயணித்துள்ளார்

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக, அறிவிப்பதற்கான கூட்டத்துக்கே அவர் இந்த பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிளில் பயணித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை வடக்கு தல்துவையில் உள்ள விடுமுறை விடுதியில் இருந்து மோட்டார் சைக்கிள் பயணம் ஒன்றரை கிலோமீற்றர் தூரத்துக்கு இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின்படி, பதிவு செய்யப்படாத வாகனங்கள், சுங்கத்திலிருந்து அகற்றுவதற்கான தற்காலிக அனுமதி இல்லாதவரை சாலையில் பயணிக்க அனுமதிக்கப்படாது.

அதேநேரம் இலங்கையில் அதிக திறன் கொண்ட எஞ்சின்களைக்கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கு அமைச்சரவையால் அனுமதி வழங்கப்படவில்லை.

எனினும், நாட்டில் அதிக எஞ்சின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கான புதிய விதிமுறைகளை ரோஹித்த அபேகுணவர்த்தன முன்மொழிந்துள்ளார்.

இலங்கையில் 450சீசீ இற்கும் அதிகமான எஞ்சின் திறன் கொண்ட பல மோட்டார் சைக்கிள்கள் இருப்பதாகவும், 450சீசீ இலிருந்து 1300சீசீ வரையிலான இயந்திரத் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் விசேட விதிமுறைகளின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...