56
இலங்கைசெய்திகள்

ஏர்பூட்டி வயல் உழுத சுமந்திரன் எம்.பி.

Share

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஏர்பூட்டி வயல் உழுது விவசாயம் செய்யும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

கிளிநொச்சி கண்டாவளையில் உள்ள தனது பூர்வீக வயலில் ஏர் பூட்டி வயல் உழுது விதை விதைத்துள்ளார்.

விவசாயிகளின் உரப் பிரச்சினை மற்றும் இரசாயன உரம், விவசாய இரசாயனப்பொருள் பற்றாக்குறை போன்றவற்றால் நாடு முழுவதும் விவசாயிகள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.

பெரும்போக விதைப்பு தொடங்கி உள்ள நிலையில் விவசாயிகளின் உரப் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு கிட்டவில்லை.

இதனை அரசுக்கு வெளிச்சமிட்டு காட்டும் வகையில் சம்பிரதாயபூர்வமாக எம்.ஏ.சுமந்திரன் விவசாயிகள் சார்பில் குரலெழுப்பியுள்ளார்.

இந்தப் பிரச்சினை குறித்து விவசாயிகள் சார்பில் சுமந்திரன் தொடர்ந்தும் குரல் எழுப்புவார் என அவரது முகநூல் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

aaaa

555

su

244799122 160922159568328 5765163401450899710 n

244329109 3079961755660644 6313109018040435687 n

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2
சினிமாசெய்திகள்

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா… புதிய ஜோடி, புரொமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல். இப்போது...

25 6831e6dc4144c
இலங்கைசெய்திகள்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – பிரதமர்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என பிரதமர் ஹரிணி...

20 23
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விளக்கமறியலில்..

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெவ்லோக்...

13 26
இலங்கைசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து நபரின் மோசமான செயல் : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்களை குறிவைத்து போதை உருண்டைகளை விற்பனை செய்தவர்...