56
இலங்கைசெய்திகள்

ஏர்பூட்டி வயல் உழுத சுமந்திரன் எம்.பி.

Share

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஏர்பூட்டி வயல் உழுது விவசாயம் செய்யும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

கிளிநொச்சி கண்டாவளையில் உள்ள தனது பூர்வீக வயலில் ஏர் பூட்டி வயல் உழுது விதை விதைத்துள்ளார்.

விவசாயிகளின் உரப் பிரச்சினை மற்றும் இரசாயன உரம், விவசாய இரசாயனப்பொருள் பற்றாக்குறை போன்றவற்றால் நாடு முழுவதும் விவசாயிகள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.

பெரும்போக விதைப்பு தொடங்கி உள்ள நிலையில் விவசாயிகளின் உரப் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு கிட்டவில்லை.

இதனை அரசுக்கு வெளிச்சமிட்டு காட்டும் வகையில் சம்பிரதாயபூர்வமாக எம்.ஏ.சுமந்திரன் விவசாயிகள் சார்பில் குரலெழுப்பியுள்ளார்.

இந்தப் பிரச்சினை குறித்து விவசாயிகள் சார்பில் சுமந்திரன் தொடர்ந்தும் குரல் எழுப்புவார் என அவரது முகநூல் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

aaaa

555

su

244799122 160922159568328 5765163401450899710 n

244329109 3079961755660644 6313109018040435687 n

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 84
செய்திகள்உலகம்

இஸ்லாமாபாத்தில் சரித்திர முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தை: ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரானியக் குழுவினரைச் சந்தித்தார் ஷெபாஸ் ஷெரீப்!

மத்திய கிழக்கில் கடந்த பெப்ரவரி 28 முதல் நீடித்து வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...