இந்த அழிப்புக்கு நீதி கோரி ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் புலம்பெயர் ஈழத் தமிழர்களால் இந்த ஆர்ப்பாட்டம் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் 48 ஆவது மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் இடம்பெற்று வருகின்ற நிலையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இறுதிப்போரில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் இனஅழிப்பு தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோசங்கள் எழுப்பப்பட்டன.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் புலிகளின் கொடிகளை ஏந்திருந்ததுடன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உருவப்படங்களையும் ஏந்தியிருந்தனர்.


Leave a comment