Parliament SL 2 1 1000x600 1
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்கு வலுக்கும் போட்டி!

Share

புதிய ஜனாதிபதி பதவிக்காக நாடாளுமன்றத்தில் ஐமுனை போட்டி நிலவுகின்றது.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் அநுரயாப்பா அபேவர்தன ஆகியோருக்கு இடையில் இந்த மோதல் உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் ஐவரும் ஜனாதிபதி வேட்பாளராக எம்.பி.க்களை வெற்றிபெறச் செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல முக்கியஸ்தர்கள் தலையிட்டு ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க அக்கட்சியில் இணைந்துள்ள இரண்டு அமைச்சர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள முனைப்பு காட்டி வருவதாக தெரியவந்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் பலமான ஒருவர், அக்கட்சி உறுப்பினர்களை அழைத்து ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக நியமிக்க கட்சியின் முக்கியஸ்தர்கள் தீவிரம் காட்டி வருவதாகவும், அவருக்கு ஆதரவளிக்க அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான குழுவும் தயாராகி வருவதாக சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, டலஸ் அழகப்பெருமவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களை வெற்றிகொள்ளும் நடவடிக்கை மொட்டு கட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுடன், ஒன்பது கூட்டுக் கட்சிகளின் குழுவும் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தயாராகி வருவதாக அறியமுடிகின்றது.

இந்நிலைமையை கருத்திற் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பி குழுவும் மூன்று அணிகளாக பிளவுபட்டுள்ளன.

அக்கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கும், மேலும் சிலர் சஜித் பிரேமதாசவிற்கும், மேலும் சிலர் டலஸ் அழகப்பெருமிற்கும் ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் உள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...