செய்திகள்இலங்கை

முதியவர்களைப் பயன்படுத்தி பணம் திரட்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை! – பொலிஸார் எச்சரிக்கை

deshabandu tennakoon
Share

” முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைப் பயன்படுத்தி மக்களிடம் பணம் திரட்டி, அதனை வியாபாரமாகவே கொண்டு நடத்துபவர்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை திரட்டியுள்ளனர். அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.”

இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன்.

” சில பிள்ளைகள் தமது பெற்றோரை வீதிகளில் விட்டுள்ளனர். இது தொடர்பில் அவர்களுடன் பேசுவோம். நிலைமையை தெளிவுபடுத்தி, மீள அழைத்து செல்லுமாறு கோருவோம். அவ்வாறு அழைத்துச்செல்லாதவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வீதிகளில் அநாதரவாக உள்ள சிலர் தமது பிள்ளைகள் மற்றும் பாதுகாவலர்களிடம் செல்வதற்கு விரும்புவதில்லை. சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். அத்தகையவர்களை சமூக நலன்புரி திணைக்களத்திடம் ஒப்படைத்து, உரிய ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும்.

அதேவேளை, முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை பயன்படுத்தி சிலர் மக்களிடம் பணம் பெறுகின்றனர். அவர்களுக்கு சிறு தொகை வழங்கப்படுகின்றது. இது வியாபாரமாகவே நடக்கின்றது. அத்தகையவர்கள் தொடர்பான தகவல்கள் புலனாய்வு பிரிவு ஊடாக திரட்டப்பட்டுள்ளன. எனவே, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” – எனவும் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....