Train 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மீண்டும் பணிப்புறக்கணிப்பில் தொடருந்து நிலைய அதிபர்கள்!!

Share

தொடருந்து நிலைய அதிபர்கள் இன்று (14) மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் உபதலைவரை பதவியிலிருந்து நீக்குவதற்கு தொடருந்து திணைக்கள பொதுமுகாமையாளர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆரம்பித்திருந்த 24 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கை நேற்று நள்ளிரவு நிறைவடைந்தது.

இந்த நடவடிக்கை காரணமாக பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டிருந்தனர். இந்நிலையில் தொடருந்து நிலைய அதிபர்கள் மீண்டும் அவசர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...