sajith
அரசியல்இலங்கைசெய்திகள்

இராஜாங்க அமைச்சரவை நியமனம்! – எதிர்க்கட்சி எதிர்ப்பு

Share

அதிக எண்ணிக்கையிலான இராஜாங்க அமைச்சரவையை ஜனாதிபதி நியமித்தமைக்கு எதிராக சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்ப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நாடு மிகவும் பாரதூரமான முறையில் வங்குரோத்தடைந்துள்ள நேரத்தில், வாழ்க்கைச் செலவு அதிகரித்துப்போன நேரத்தில், அரசால் தன்னிச்சையாகவும், நெறிமுறையற்றதுமாக இராஜாங்க அமைச்சர்கள் 37 பேரளவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பெரும் எண்ணிக்கையிலான இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பது இத்தருணத்தில் நாட்டுக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்பதோடு, அது மேலும் இந்த நாட்டை அதலபாதாளத்துக்குத் தள்ளும் என்று ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாக நம்புகின்றது.

இந்த வீணான நிலைமைக்கு எதிரான மக்களின் எதிர்ப்புப் போலவே குடிமக்கள் போராட்டத்தின் நோக்கங்களை மீறி இந்த மிகப் பெரிய இராஜாங்க அமைச்சரவையை நியமித்ததன் மூலம் அரசு பழைய வழமையான பாதையில் பயணிக்கின்றது என்பதையே மறைமுகமாக உணர்த்துகின்றது.

இதன் பிரகாரம், இந்தப் பாரிய இராஜாங்க அமைச்சரவையை ஜனாதிபதி நியமித்தமைக்கு எதிராக நேற்றுக் கூடிய ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 4
செய்திகள்உலகம்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: அமெரிக்காவில் போர் நிறுத்த முயற்சி முறியடிப்பு

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

11 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: வளைகுடா கடற்பரப்பில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் காரணமாக ஈரானின் ஹோர்முஸ் நீரிணை (Strait of...

10 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அருகே இரண்டாவது ஈரானிய கப்பல்: 87 சடலங்கள் மீட்பு – பாராளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்!

இலங்கை கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்தில் (EEZ) இரண்டாவது ஈரானிய கப்பல் (IRINS Bushehr...

09 4
செய்திகள்உலகம்

ஈரான் அணு ஆயுதத் திறனை இழக்கும் வரை போர்நிறுத்தம் கடினம்: அவுஸ்திரேலிய, கனடிய பிரதமர்கள் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் கனடியப்...