sajith
அரசியல்இலங்கைசெய்திகள்

இராஜாங்க அமைச்சரவை நியமனம்! – எதிர்க்கட்சி எதிர்ப்பு

Share

அதிக எண்ணிக்கையிலான இராஜாங்க அமைச்சரவையை ஜனாதிபதி நியமித்தமைக்கு எதிராக சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்ப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நாடு மிகவும் பாரதூரமான முறையில் வங்குரோத்தடைந்துள்ள நேரத்தில், வாழ்க்கைச் செலவு அதிகரித்துப்போன நேரத்தில், அரசால் தன்னிச்சையாகவும், நெறிமுறையற்றதுமாக இராஜாங்க அமைச்சர்கள் 37 பேரளவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பெரும் எண்ணிக்கையிலான இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பது இத்தருணத்தில் நாட்டுக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்பதோடு, அது மேலும் இந்த நாட்டை அதலபாதாளத்துக்குத் தள்ளும் என்று ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாக நம்புகின்றது.

இந்த வீணான நிலைமைக்கு எதிரான மக்களின் எதிர்ப்புப் போலவே குடிமக்கள் போராட்டத்தின் நோக்கங்களை மீறி இந்த மிகப் பெரிய இராஜாங்க அமைச்சரவையை நியமித்ததன் மூலம் அரசு பழைய வழமையான பாதையில் பயணிக்கின்றது என்பதையே மறைமுகமாக உணர்த்துகின்றது.

இதன் பிரகாரம், இந்தப் பாரிய இராஜாங்க அமைச்சரவையை ஜனாதிபதி நியமித்தமைக்கு எதிராக நேற்றுக் கூடிய ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...