இலங்கைத் தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப உரிய வசதி செய்துதர வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில்,
“யாழ்ப்பாணம் சிறையிலுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த மார்ச் 31ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு தயாராகவுள்ளது எனத் தெரிவித்திருந்தேன்.
தூத்துக்குடியில் இருந்து காய்கறி, மருந்துகளைக் கொழும்புக்கு அனுப்ப தமிழக அரசு உறுதியாக உள்ளது. எனவே, இலங்கைத் தமிழர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப உரிய வசதி செய்துதர வேண்டும்” – என்றுள்ளது.
#IndianNews
Leave a comment