12 4
இலங்கைசெய்திகள்

லெபனானில் உள்ள இலங்கையர் தூதரகத்தில் தஞ்சம்

Share

லெபனானில் உள்ள இலங்கையர் தூதரகத்தில் தஞ்சம்

லெபனான் மீதான இஸ்ரேலின் வான் மற்றும் தரைவழி அகோரத் தாக்குதலை அடு்த்து அங்குள்ள இலங்கையர்கள் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் தஞ்சமடையத் தொடங்கியுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்குள் 32 பேர் வரையான இலங்கையர்கள் அவ்வாறு தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் அந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று வௌிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் இஸ்ரேலியத் தாக்குதல் காரணமாக லெபனானில் உள்ள எந்தவொரு இலங்கையரும் இதுவரை எதுவித பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்றும் அங்குள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

லெபனானில் உள்ள இலங்கையர்களை அங்குள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பைப் பேணிக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ள இலங்கையின் வௌிநாட்டலுவல்கள் அமைச்சு, அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் தொடர்ந்தும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...