rtjy 287 scaled
இலங்கைசெய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் பாதிப்பு

Share

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் பாதிப்பு

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான 2 விமானப் பயணங்கள் இன்று தடைப்பட்டுள்ளதாக விமான நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷின் டாக்கா நகர் நோக்கி பயணிக்கவிருந்த UL 189 இலக்க விமானம், தொழில்நுட்ப கோளாறுக்குள்ளானமையினால் பயணத்தை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

குறித்த விமானப் பயணம் தாமதமடைந்தமையினால், பாகிஸ்தான் நோக்கி பயணிக்கவிருந்த UL 153 இலக்க விமானத்தின் பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தியாவின் சென்னை நோக்கி பயணித்த UL 141 இலக்க விமானத்தை தரையிறக்குவதில் இன்று(28) காலை தாமதம் ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாக ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...