tamilnaadi 11 scaled
இலங்கைசெய்திகள்

சேவையில் இல்லாத விமானங்களுக்கு 565 கோடி ரூபாவை வாடகை

Share

சேவையில் இல்லாத விமானங்களுக்கு 565 கோடி ரூபாவை வாடகை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 08 விமானங்கள் சேவையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட போதிலும் பெருந்தொகை பணத்தை செலுத்தியுள்ளது.

அந்த விமானங்களுக்கான வாடகையாக 5,646.76 மில்லியன் ரூபாவை விமான நிறுவனம் செலுத்தியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனது விமான நடவடிக்கைகளுக்கு 27 விமானங்களின் தேவையுடன் உள்ளது.

தற்போது நிறுவனத்திடம் 24 விமானங்கள் மட்டுமே உள்ளன. அறிக்கைக்கமைய, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தற்போது 18 விமானங்களை செயற்பாட்டிற்குப் பயன்படுத்துகிறது.

மேலும் நிறுவனம் வைத்திருந்த 24 விமானங்களில் 08 விமானங்கள் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதிக்குள் சேவையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது.

2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி வரை பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட இந்த விமானங்களுக்கான வாடகைத் தொகையாக 5,646.76 மில்லியன் ரூபாவை விமான நிறுவனம் செலுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...