rtjy 272 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

கொழும்பு அரசியலில் குழப்பம்! கட்சி தாவும் 16 எம்.பிக்கள்

Share

கொழும்பு அரசியலில் குழப்பம்! கட்சி தாவும் 16 எம்.பிக்கள்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்ட 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கட்சியில் இணைவது தொடர்பாக அந்தக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர பிரியதர்ஷன யாப்பா, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த, அமைச்சர் நளின் பெர்னாண்டோ உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவான 16 பேர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.

சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, ஜகத் புஸ்பகுமார மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, ஆகியோரும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் குறித்த 16 பேரும் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவது தொடர்பில் நீண்ட நேரம் பேசியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...