tamilni 417 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் நோய்க்கிருமிகளாக மாறியுள்ள உணவு!

Share

இலங்கையில் நோய்க்கிருமிகளாக மாறியுள்ள உணவு!

உள்ளுர் சந்தையில் இருந்து உணவுக்காக கொள்வனவு செய்யப்படும் மரக்கறிகள், பழங்கள், அரிசிகள், இறைச்சிகள் மற்றும் மீன்களில் பெரும்பாலானவை விஷம் மற்றும் இரசாயனங்கள் காரணமாக நோய்க்கிருமிகளாக மாறியுள்ளதாக வைத்தியர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலைமையால் உலகில் விஷ உணவுகளை உட்கொள்ளும் நாடுகளில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பலாப்பழத்தைப் பாதுகாக்கவும், மாம்பழங்களைப் பழுக்க வைக்கவும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் பெரும்பாலான கடைகளில் கோழி பிரியாணி மற்றும் பிரைட் ரைஸ் என்பன மஞ்சள் நிறமாக மாற்றுவதற்கு அதிக அளவு மஞ்சள் சாயம் பயன்படுத்தப்படுகின்றது.இது ஆரோக்கியமற்ற நிலைமையை ஏற்படுத்துகின்றது.

மஞ்சளுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் இந்த மஞ்சள் நிற சாயம், சோறு போன்றவற்றுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால், அவற்றைச் சாப்பிட்டால் நோய்வாய்ப்படும் அபாயம் அதிகமாகவுள்ளது.

எனவே இதற்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கூடிய அமைப்பைத் தயாரிக்க வேண்டும் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...