tamilnif 14 scaled
இலங்கைசெய்திகள்

திடீரென இரத்து செய்யப்பட்ட சென்னைக்கான விமான சேவை

Share

திடீரென இரத்து செய்யப்பட்ட சென்னைக்கான விமான சேவை

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் சென்னைக்கு நேற்று (26.12.2023) காலை பயணிக்கவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திடீரென இரத்துச் செய்யப்பட்டமையினால் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

226 பயணிகளுடன் நேற்று காலை 7.20 மணிக்கு சென்னைக்கு புறப்படவிருந்த U.L என்ற ஸ்ரீலங்கன் விமானமே எந்தவித முன்னறிவிப்புமின்றி பயணத்தினை இரத்து செய்துள்ளது.

இதன் காரணமாக பயணிகள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன தொடர்பாடல் முகாமையாளர் தீபால் வி. பெரேரா விளக்கமளிக்கையில்,

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் திடீரென இரத்து செய்யப்பட்டதுடன், பயணிகள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டு வேறு விமானத்தில் பின்னர் அனுப்பிவைக்கப்பட்டனர் .

மேலும், இந்த இடையூறுகளுக்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
12 4
செய்திகள்உலகம்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: அமெரிக்காவில் போர் நிறுத்த முயற்சி முறியடிப்பு

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

11 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: வளைகுடா கடற்பரப்பில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் காரணமாக ஈரானின் ஹோர்முஸ் நீரிணை (Strait of...

10 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அருகே இரண்டாவது ஈரானிய கப்பல்: 87 சடலங்கள் மீட்பு – பாராளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்!

இலங்கை கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்தில் (EEZ) இரண்டாவது ஈரானிய கப்பல் (IRINS Bushehr...

09 4
செய்திகள்உலகம்

ஈரான் அணு ஆயுதத் திறனை இழக்கும் வரை போர்நிறுத்தம் கடினம்: அவுஸ்திரேலிய, கனடிய பிரதமர்கள் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் கனடியப்...