tamilni 40 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெரும்பாலானோருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

Share

இலங்கையில் பெரும்பாலானோருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

நாட்டில் 10.13 மில்லியன் மக்கள் தங்களை மாற்றிக்கொள்ளும் திறனின்மையால் பாதிக்கப்படுகின்றனர் என ஒரு புதிய ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வடக்கு – கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களைச் சேர்ந்த 10.13 மில்லியன் மக்கள், அதாவது நாட்டின் சனத்தொகையில் 10இல் ஆறு இலங்கையர்கள் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன், கல்வி இல்லாமை மற்றும் பேரழிவுகளுக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் திறனின்மையால் பாதிக்கப்படுகின்றனர் என இந்த ஆய்வு குறிப்பிடுகின்றது.

ஐக்கிய நாடுகளின் அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. 25,000 குடும்பங்களின் பிரதிநிதிகளை மாதிரியாகக் கொண்டு கடந்த ஆண்டு நவம்பர் முதல் இந்த ஆண்டு மார்ச் வரை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதற்கமைய இலங்கையின் மக்கள் தொகையில் 55 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், பேரிடர் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் போன்றவற்றில் ஆபத்தில் இருக்கின்றனர் என இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

இதன்படி பாதிப்பை எதிர்கொள்ளும் 12.34 மில்லியன் பேரில், கணிசமான 10.13 மில்லியன் பேர் கிராமப்புறங்களில் வசிப்பவர்களாவர். இவர்கள் குறிப்பாக கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் வசிக்கின்றனர் என்று ஆய்வு கண்டறிந்துள்ளது.

Share
தொடர்புடையது
25 6849c5dfe0a82
உலகம்செய்திகள்

சீனாவுடன் அதிரடியாக ஒப்பந்தம் செய்த ட்ரம்ப்..! நடக்கவுள்ள மாற்றங்கள்

லண்டனில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமெரிக்காவும் சீனாவும் ஒரு புதிய ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி...

25 684a2d1c7f215
இலங்கைசெய்திகள்

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

காலஞ்சென்ற மற்றும் ஓய்வு பெற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் முதல்...

25 684a1d46ac31b
இந்தியாசெய்திகள்

இந்தியா – இலங்கை ஒப்பந்தம் குறித்து வெளியாகியுள்ள சந்தேகம்

இந்தியாவின் இணக்கப்பாடு இன்றி இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையை அம்பலப்படுத்த முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளதாக...

25 684a2b04cca7e
இலங்கைசெய்திகள்

வெலிகம சம்பவத்தின் போது தவறாக வழிநடத்தப்பட்ட அதிகாரிகள்

2023ஆம் ஆண்டு வெலிகம சம்பவம் குறித்து விசாரிக்கச் சென்ற தன்னையும் ஏனையவர்களையும் மூத்த பொலிஸ் அதிகாரிகள்...