ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களது பெயர் அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களது பெயர் அறிவிப்பு

Share

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களது பெயர் அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார் என சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்கள்.

ரணில் விக்ரமசிங்கவின் வேட்புமனு எதிர்வரும் காலங்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். அறிவிப்பு வெளியானதும், சில பெரிய மாற்றங்களை பொதுமக்கள் பார்க்கலாம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார். அதற்குப் பதிலாக கடந்த ஆண்டு தேர்தலின் போது அவர் செய்ததைப் போல டலஸ் அழகப்பெருமவின் வேட்புமனுவுக்கு ஆதரவளிப்பார்.

சஜித் பிரேமதாச மீண்டும் தேர்தலில் தோல்வியடைய முடியாது, எனவே அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார்.

நாட்டைக் காப்பாற்ற கடந்தாண்டு ரணில் விக்ரமசிங்க முன்வந்தார் என்பது மக்களுக்குத் தெரியும். கடந்த ஆண்டிலிருந்து கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்லவும், நீண்டகால மற்றும் நிலையான அபிவிருத்திக்கான மேடையை அமைப்பதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் முடியும் என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...