விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரிடம் பணயக் கைதிகளாக இருந்த தமிழர்கள்!
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரிடம் பணயக் கைதிகளாக இருந்த தமிழர்கள்!

Share

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரிடம் பணயக் கைதிகளாக இருந்த தமிழர்கள்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனிடம் பணயக் கைதிகளாக இருந்த தமிழர்களை பாதுகாக்க இராணுவத்தினர் உயிர்த் தியாகம் செய்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது வடக்கில் கண்டுபிடிக்கப்படும் மனித புதைகுழிகள் தொடர்பில் உரிய தரப்பினர் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த மனிதப் புதைகுழிகளுடன் இலங்கை இராணுவத்தை தொடர்புப்படுத்தவே தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றார்கள்.

தமிழர்களை பாதுகாக்க இராணுவத்தினர் உயிர்த் தியாகம் செய்தார்கள்

தமிழர்களை கொல்ல வேண்டிய தேவை இராணுவத்திற்கு இல்லை. இலங்கை இராணுவத்தினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டார்கள் என முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

இலங்கையில் யுத்தக் குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று சர்வதேச நிபுணர்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

பிரபாகரனிடம் பணயக் கைதிகளாக இருந்த தமிழர்களை பாதுகாக்க இராணுவத்தினர் உயிர்த் தியாகம் செய்தார்கள். முல்லைத்தீவு பகுதியில் 600 பொலிஸாரை விடுதலை புலிகள் அமைப்பினர் படுகொலை செய்தனர். இது யுத்தக் குற்றம் இல்லையா?

யார் மனிதப் படுகொலை செய்தது. விடுதலைப் புலிகளே மனித படுகொலை செய்தார்களே தவிர இராணுவத்தினர் அல்ல. தமிழர்களை பாதுகாத்து நாங்கள் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்தோம் என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68e756024d1e0
செய்திகள்இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது மீளாய்வு: டிசம்பர் 15 அன்று பரிசீலனை – 347 மில்லியன் அமெரிக்க டொலர்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீடிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் ஆதரிக்கப்படும் இலங்கையின் பொருளாதார...

Parliament2020
செய்திகள்அரசியல்இலங்கை

பாராளுமன்றில் அமைச்சு ஒதுக்கீடுகள் நிறைவேற்றம்: போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வீடமைப்பு அமைச்சுக்களுக்கு ஒப்புதல்!

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் எட்டாவது நாளான இன்று (நவம்பர் 24),...

1795415 01 1
செய்திகள்இலங்கை

புன்னாலைக்கட்டுவன் கொலை: தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு – சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்று...

MediaFile 2 6
செய்திகள்அரசியல்இலங்கை

பிரிவினைவாதக் கொள்கைகள்: கனேடிய உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கத்ரீன் மார்ட்டினை (Isabelle Catherine...