விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரிடம் பணயக் கைதிகளாக இருந்த தமிழர்கள்!
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரிடம் பணயக் கைதிகளாக இருந்த தமிழர்கள்!

Share

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரிடம் பணயக் கைதிகளாக இருந்த தமிழர்கள்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனிடம் பணயக் கைதிகளாக இருந்த தமிழர்களை பாதுகாக்க இராணுவத்தினர் உயிர்த் தியாகம் செய்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது வடக்கில் கண்டுபிடிக்கப்படும் மனித புதைகுழிகள் தொடர்பில் உரிய தரப்பினர் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த மனிதப் புதைகுழிகளுடன் இலங்கை இராணுவத்தை தொடர்புப்படுத்தவே தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றார்கள்.

தமிழர்களை பாதுகாக்க இராணுவத்தினர் உயிர்த் தியாகம் செய்தார்கள்

தமிழர்களை கொல்ல வேண்டிய தேவை இராணுவத்திற்கு இல்லை. இலங்கை இராணுவத்தினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டார்கள் என முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

இலங்கையில் யுத்தக் குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று சர்வதேச நிபுணர்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

பிரபாகரனிடம் பணயக் கைதிகளாக இருந்த தமிழர்களை பாதுகாக்க இராணுவத்தினர் உயிர்த் தியாகம் செய்தார்கள். முல்லைத்தீவு பகுதியில் 600 பொலிஸாரை விடுதலை புலிகள் அமைப்பினர் படுகொலை செய்தனர். இது யுத்தக் குற்றம் இல்லையா?

யார் மனிதப் படுகொலை செய்தது. விடுதலைப் புலிகளே மனித படுகொலை செய்தார்களே தவிர இராணுவத்தினர் அல்ல. தமிழர்களை பாதுகாத்து நாங்கள் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்தோம் என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 15
செய்திகள்உலகம்

எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த மேலதிக கப்பல்கள் வருகை: பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு,...

01 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் இன்று சில பகுதிகளில் மழை மற்றும் பனிமூட்டமான வானிலை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப்...

29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....